- மோடி
- முதல் அமைச்சர்
- எம்எல்ஏ கே.
- ஸ்டாலின்
- சென்னை
- ஸ்பெயின்
- கே. ஸ்டாலின்
- பெருமாள் கே. ஸ்டாலின்
- முதல்வர் எம்.எல்.ஏ.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மாட்ரிட்
- பிற்பகல்
- பாராளுமன்ற
- முதலமைச்சர் எல்எலா கே.
சென்னை: ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்து இருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27-ம் தேதி மேட்ரிட் சென்றார். அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் திரண்டு முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்து இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன். ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் சந்தித்தேன். ஸ்பெயின் நாட்டில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தேன். ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
ரூ.3440 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹபக் லாய்டு ரூ.2500 கோடி, எடிபான் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பெருமளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப்படும். உற்பத்தி துறையில் முந்தி செயல்படும் மாநிலமாக தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார். 400 மட்டுமல்ல மொத்தம் உள்ள 543 தொகுதிகளையும் கைப்பற்றுவேன் என்று மோடி சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று விஜய் அரசியல் பயணம் குறித்து முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி appeared first on Dinakaran.